புகைப்படத் தொகுப்பு
சிங்கள மொழி தினம்
[7]மார்ச் 2, 2021
1815 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் திகதி ஆங்கில ஏகாதிபத்தியர்களின் நிர்வாகத்திற்கு எதிராக வாரியபொல சுமங்கள தேரர் அவர்கள் ஆங்கிலக் கொடியை கீழே போட்டு மிதித்து இலங்கைக் கொடியை உயர்த்தியதும் அண்மைய யுகத்தில் இந்நாட்டில் தோற்றம் பெற்ற தலை சிறந்த பண்டிதரொருவராகிய குமாரதுங்க முனிதாச அவர்கள் மரணித்ததும் 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியாகும். இந்நிகழ்வுகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தினால் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சிங்கள மொழி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தினத்திற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் 2021.03.02 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களுக்கு சிங்கள மொழிப் பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதற்காக நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது.