புகைப்படத் தொகுப்பு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு
[10]Sept. 1, 2022
இலங்கை அரசாங்கத்தினால் ஜூலை மாதம் முதலாம் திகதி இலங்கையின் அரசகரும மொழிகள் வாரமாகவும்> அம்மாதத்தின் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையான வாரம் இலங்கையின் அரசகரும மொழிகள் வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரத்தினுள் அரசகரும மொழிக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் மொழிகளின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி அரசகரும மொழிகள் வாரத்தினுள் இளைஞர்களுக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் அரசகரும மொழிகள் வாரத்தினை கொண்டாடும் ஒரு நிகழ்ச்சித் திட்டமாக “மொழியின் மலர்ச்சி” எனும் விசேட கருப்பொருளை முதன்மையாகக் கொண்ட இளைஞர்களுக்கான தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்வானது அரசகரும மொழிக் கொள்கை மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலின் முக்கியத்துவம் எனும் விடயங்களை முதன்மைப்படுத்தி 2022.09.01 ஆம் திகதி தேசிய மன்றத்தில் நடைபெற்றது.